"BEGGARS ARE NOT CHOSERS"
பிச்சைக்காரர்கள்
தங்கள் வாழ்கையை
விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை...
அதேபோல்
எந்த ஒரு உயிரினமும்
தங்களுடைய வாழ்நாளில்
போராட்டத்தையோ,
போரையோ,
விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை...
அவர்களது
வாழ்வியலும்,
வாழ்விடமும்,
சுழலும்,
சுற்றியுள்ள மக்களும்,
சமூகமும்
ஏற்படுத்திக்கொடுப்பதே...
அப்படி
ஈழப்போருக்கும்,
அங்கு நடக்கும் அத்துமீறலுக்கும்,
இனப்படுகொலைக்கும்,
அப்பாவி மக்கள் மீதான போருக்கும்,
மனிதநேயமற்ற இந்த கேவலத்துக்கும்
ஏதோ ஒரு வகையில்
நாமும் காரணம்தான்...
நம்முடைய
அம்மாவை,
அக்காவை,
தங்கையயை,
மனைவியயை,
தோழியயை
கூட்ட நெரிசலில் இடிப்பவனையே
கொள்ளத்துடிக்கும்
நாம்...
அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு
எப்படி தீர்வு காண
போகிறோம்...
என் வாழ்நாளில்
முதன்முதலாக
இம்மண்ணில் பிறந்தற்காக
வெட்கி
தலை குனிந்த
மணநிலையோடு
இந்தியத்தமிழன்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment